உடுமலை:உடுமலை அருகே, உயர்நிலையாக தரம் பெற்ற பள்ளியில், போதிய வசதிகள்
இல்லாததால் மாணவர்கள் திண்டாடுகின்றனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை
அமராவதி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, 2008-09ல் உயர் நிலைப்
பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. சுற்றுப் பகுதிகளை சேர்ந்த, 200க்கும்
மேற்பட்டோர் படித்து வருகின்றனர். பள்ளிக்கு தனி கட்டடம் கட்டும் வரை,
அமராவதி நகர் துவக்கப்பள்ளி வளாகத்திலேயே, தற்காலிகமாக உயர்நிலைப் பள்ளி
செயல்படும் என, கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால்,
கட்டட வசதி ஏற்படுத்த, இடத்தை தேர்வு செய்யவோ, நிதி ஒதுக்கவோ எவ்வித
நடவடிக்கையும் எடுக்கவில்லை.
போதிய வகுப்பறை இல்லாத நிலையில், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, மரத்தடியே வகுப்பறையாக மாறியுள்ளது. மழை காலத்தில், இதிலும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, பள்ளிக்கு நிரந்தர கட்டட வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போதிய வகுப்பறை இல்லாத நிலையில், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, மரத்தடியே வகுப்பறையாக மாறியுள்ளது. மழை காலத்தில், இதிலும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, பள்ளிக்கு நிரந்தர கட்டட வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.