விருதுநகர்: புதிய ஆசிரியர்கள் நியமனத்தில், ஆசிரியர் தகுதிதேர்வு கட்டுப்பாடு பற்றி குறிப்பிடாததால் ஆசிரியர்கள் குழப்பத்தில்
உள்ளனர். மத்திய அரசின் கல்வி உரிமைச்சட்டத்தின் படி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள், ஆசிரியருக்கான தகுதி தேர்வு எழுதி, ஐந்து ஆண்டுகளுக்குள் தேர்வானவர்களாக இருக்க வேண்டும், என ,தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த மூன்று மாதங்களுக்கு முன் புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியர்கள் சங்கத்தினர்,"ஆசிரியர் தகுதி தேர்வு என்பது தேவையில்லாததது,' என்றனர்.
பல ஆசிரியர்களுக்கு ,வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தி, பணி நியமனம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் , கடந்த ஒரு மாதமாக வழங்கப்படும் ஆசிரியர் நியமன உத்தரவில், தகுதி தேர்வு பற்றி குறிப்பிடாமல் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு வருகின்றன. புதிய ஆசிரியர்கள் நியமனத்தில், இந்த கட்டுப்பாடு நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க அரசும், பள்ளிக்கல்வித்துறையும் தெளிவான
முடிவினை அறிவிக்க வேண்டும்.
உள்ளனர். மத்திய அரசின் கல்வி உரிமைச்சட்டத்தின் படி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள், ஆசிரியருக்கான தகுதி தேர்வு எழுதி, ஐந்து ஆண்டுகளுக்குள் தேர்வானவர்களாக இருக்க வேண்டும், என ,தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த மூன்று மாதங்களுக்கு முன் புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியர்கள் சங்கத்தினர்,"ஆசிரியர் தகுதி தேர்வு என்பது தேவையில்லாததது,' என்றனர்.
பல ஆசிரியர்களுக்கு ,வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தி, பணி நியமனம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் , கடந்த ஒரு மாதமாக வழங்கப்படும் ஆசிரியர் நியமன உத்தரவில், தகுதி தேர்வு பற்றி குறிப்பிடாமல் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு வருகின்றன. புதிய ஆசிரியர்கள் நியமனத்தில், இந்த கட்டுப்பாடு நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க அரசும், பள்ளிக்கல்வித்துறையும் தெளிவான
முடிவினை அறிவிக்க வேண்டும்.