தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் இளமாறன் வெளியிட்ட அறிக்கை: மின்
பற்றாக்குறையால் ஏற்படும், மின்வெட்டை சமாளிக்கும் விதத்தில் அரசு மற்றும்
தனியார் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் ஜெனரேட்டர் பயன்படுத்துவதற்கும்,
அதற்கான தொகை மற்றும் டீசல் செலவை அரசே ஏற்கும் என்றும் முதல்வர்
அறிவித்திருப்பது, பெற்றோர், ஆசிரியர், மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப்
பெற்றுள்ளது.
இதன் மூலம் 10ம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வை எதிர்கொள்ளும்
மாணவர்கள், தடையின்றி படிக்கவும், கற்றல் - கற்பித்தல் பணி சிறப்பாக
நடக்கவும் உதவிய முதல்வருக்கு நன்றி. இவ்வாறு இளமாறன் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comment about this post...