அலுவலக காலிப்பணியிடம் நிரப்பஆரம்பப்பள்ளி ஆசிரியர் கோரிக்கைஅலுவலக காலிப்பணியிடம் நிரப்பஆரம்பப்பள்ளி ஆசிரியர் கோரிக்கை
மோகனூர்: "தொடக்ககல்வித் துறையின் நிர்வாக நலன், ஆசிரியர் நலன் கருதி,
உதவித் தொடக்கக்கல்வி அலுவலக காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும்' என, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டத்தில்,
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
வட்டார நிர்வாகிகள் செயற்குழு கூட்டம், மோகனூரில் நடந்தது. வட்டாரத் தலைவர்
ராஜேந்திரன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் நிர்மலா வரவேற்றார்.
கூட்டத்தில், மோகனூர் ஒன்றிய ஆசிரியர்களின் இடைநிலை, சாதாரண நிலை தர ஊதியத்தில் பணியாற்றும் இடைநிலை தேர்வு நிலை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம், கடந்த ஓராண்டாக வழங்காமல் நிலுவையில் உள்ளது. அந்த ஊதியத்தை, உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்வு நிலை, உயர்நிலைக்கல்விக்கான முன் அனுமதி ஆணைகள், கடந்த 2010ம் ஆண்டு ஃபிப்ரவரி முதல் தீர்வு காணாமல் உள்ளதை, விரைந்து தீர்வு காண வேண்டும். தொடக்ககல்வித் துறையினர் நிர்வாக நலன், ஆசிரியர் நலன் கருதி, உதவித் தொடக்கக்கல்வி அலுவலக காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள், ஆண்டின் இறுதியில் தொடர்ச்சியாக நடத்தப்படுவதால், பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத நிலை ஏற்படுவதுடன், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. அதனால், பயிற்சிகள் அனைத்தும், ஆண்டின் துவக்கத்தில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஃபிப்ரவரி 28ம் தேதி நடக்கும், அகில இநதிய பொது வேலை நிறுத்தத்தில், ஒன்றியத்தில் உள்ள திரளான ஆசிரியர்கள் பங்கேற்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வட்டாரச் செயலாளர் சரவணன், பொருளாளர் சுயம்புலிங்கம், மாவட்டச் செயலாளர் மாதேஸ், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comment about this post...