மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவு அலவன்சுக்கு
நிர்ணயிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளது.மத்திய
அரசு வட்டாரங்கள் கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்கள், தங்களின் குழந்தைகளின்
கல்விக்காக செலவிட்ட தொகையை, அரசிடம் இருந்து பெறுவதற்கு சில விதிமுறைகள்
உள்ளன. இதன்படி, குறைந்தபட்சம் 5 வயது நிரம்பிய குழந்தைகளின் கல்விச்
செலவுகளை மட்டுமே, அரசிடம் கோர முடியும்.இது தொடர்பாக, மத்திய அரசு
ஊழியர்களிடம் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து,
குறைந்தபட்ச வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு, நிதி
அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, மத்திய அரசின் அனைத்து
துறைகளுக்கும், இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு மத்திய
அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comment about this post...