தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஓய்வு பெற்றோர் பிரிவு துவக்க விழா
திருநெல்வேலி:தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட ஓய்வு
பெற்றோர் பிரிவு அமைப்பு துவக்க விழா வள்ளியூரில் நடந்தது.மாவட்ட தலைவர்
பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தர்மராஜ் பிராங்களின்
வரவேற்றார்.மாநில துணை செயலாளர் ராஜேந்திரன், விருதுநகர் மாவட்ட செயலாளர்
ரமேஷ், மாநில ஓய்வு பெற்றோர் பிரிவு தென் மண்டல அமைப்பாளர் மருது, மாநில
துணை செயலாளர் செய்யது இப்ராகிம் மூசா, மாநில செயற்குழு உறுப்பினர்
ஆரோக்கிராஜ் உட்பட பலர் பேசினர்.
மாநில பொது செயலாளர் ரங்கராஜன் நிறைவு பேரூரை ஆற்றினார். ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாவட்ட தலைவராக மூக்கையா, செயலாளராக பாண்டியன், பாண்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.மாவட்ட ஓய்வு பெற்றோர் பிரிவு அமைப்புக்கான நிதி 11 ஆயிரம் ரூபாய் மற்றும் உறுப்பினர் சேர்க்கை படிவத்தை மாவட்ட செயலாளர் பாண்டியனிடம், மாநில பொது செயலாளர் ரங்கராஜன் வழங்கினார். இதில் வள்ளியூர் வட்டார செயலாளர் மோதிலால்ராஜ், வட்டார தலைவர் கருணாகரன், பொருளாளர் அண்ணாமலை, நிர்வாகிகள் அசோக், சாமியா, ராமர், கருணாகரன், மதி, அருள்ராஜ், நடராஜன், ஜான் துரைசாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.மாவட்ட பொருளாளர் சிவஞானம் நன்றி கூறினார்.