ஆசிரியர்
பயிற்சி, இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள், நாளை மார்ச் 31ம் தேதி
வெளியிடப்படும், என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா
தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஆசிரியர் பயிற்சி இரண்டாம் ஆண்டு தேர்வை, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர்.
இதற்கான மதிப்பெண் சான்றிதழ்கள் 31ம் தேதி, அந்தந்த ஆசிரியர் பயிற்சி
நிறுவனங்களிலும், முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வெழுதிய
தனித்தேர்வு மாணவர்களுக்கான சான்றிதழ்கள், அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி
மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும் வழங்கப்படும்.
அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பட்டயச் சான்றிதழ் கிடைக்கவில்லை எனில், 4ம் தேதிக்குள் தேர்வுத்துறை இயக்குனரகத்தை அணுகலாம்.
அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பட்டயச் சான்றிதழ் கிடைக்கவில்லை எனில், 4ம் தேதிக்குள் தேர்வுத்துறை இயக்குனரகத்தை அணுகலாம்.
மறு
கூட்டலுக்கான விண்ணப்பங்களை, அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும்
பயிற்சி நிறுவனங்களில் இருந்து, 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை பெற்றுக்
கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 4ம் தேதிக்குள், சம்பந்தபட்ட
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டும் இவ்வாறு வசுந்தரா
கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comment about this post...